Mens day – 2012 (ஆடவர் தினம் – 2012)
துபாய் தமிழ்ச்சங்கத்தின் மே மாத நிகழ்வாக ஆடவர் தினம் சென்ற 18 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) துபாய் சிற்றோடை பூங்கா, குழந்தைகள் நகர கலையரங்கத்தில் (Dubai Creek park, Children city Auditorium) சிறப்பாக நடைபெற்றது.



துபாய் தமிழ்ச் சங்கம் 2002 ஆம் ஆண்டு கலை, கலாச்சாரம் , மற்றும் சமூகசேவையை சங்கத்தின் உறுப்பினர்கள் வழியாக மேம்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டது. துபாய் தமிழ்ச் சங்கம் ஒரு தன்னார்வ இலாபநோக்கமற்ற அமைப்பு. தொடங்கிய நாள் முதல் இன்று வரை, உறுப்பினர்கள் துணையுடன் வளர்ந்து 10 ஆண்டுகள் கடந்து வந்துள்ளது.
அமீரகத்தில், முதல் முதலாக "குழந்தைகள் திறமையை வெளிப்படுத்தும் தினம் "CHILDRENS TALENT DAY " கொண்டாடியது துபாய் தமிழ்ச் சங்கம் தான் என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். இதற்கு காரணம் கலைத்திரனில் சிறந்து விளங்கும் அமைப்பில் உள்ள பெண் உறுப்பினர்களின் பங்களிப்பு என்றால் மிகையாகாது. துபாய் தமிழ்ச் சங்கம் பற்றி மேலும் விவரம் அறிய "About us " பகுதியை பாருங்கள்.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
-- மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
